நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வாஷிங்டனில் நான்கு பேரை குத்திக் கொன்ற ஆடவர் போலீஸாரல் சுட்டுக் கொல்லப்பட்டார்

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததுடன், சந்தேகநபர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பியர்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, டகோமா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு இல்லத்தில் உத்தரவை மீறியதாக கூறப்படும் ஒருவரை பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து துணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

காலை 9.30 மணியளவில், அந்த நபர் வீட்டின் வெளியே பலரை கத்தியால் தாக்கி வருவதாக பலர் தகவல் தெரிவித்தனர். 9.33 மணியளவில் துணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

இந்த தாக்குதலில் 32 வயதுடைய சந்தேகநபர் உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடுமையாக காயமடைந்த ஐந்தாவது நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset