செய்திகள் உலகம்
ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி
இஸ்லாமாபாத்:
தெற்கு பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பால் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கராச்சி நகரில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் உயிருடன் உள்ள மக்களை மீட்க, கனரக இயந்திரங்கள், வெட்டும் கருவிகளின் உதவியுடன் மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மீட்புப் பணியாளர் ஒமைர் கான் தெரிவித்தார்.
ரமலான் முதல் நாளில் அதிகாலை சஹரி (Sehri) உணவுக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் காயமடைந்த குறைந்தது 14 பேர் நகரின் முக்கிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜப்பார் கன்வார் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:08 pm
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
February 20, 2026, 4:39 pm
அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
February 20, 2026, 12:12 pm
இந்தோனேசியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 19% ஆக குறைப்பு
February 20, 2026, 12:12 pm
மலைக் குளிரில் காதலியை தனியாக விட்டுச் சென்ற ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 20, 2026, 12:07 pm
ரமலானை முன்னிட்டு காசாவுக்குக் கூடுதல் உதவிகளை அனுப்பிய எகிப்து
February 20, 2026, 11:20 am
“15 நாளில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்கா ஈரானை தாக்கும்”: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 5:19 pm
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
February 19, 2026, 4:09 pm
