நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

பியூனஸ் அயர்ஸ்:

அர்ஜென்டினாவில் ஜனாதிபதி ஜேவியர் மிலே முன்வைத்த தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக 24 மணி நேர பொதுப் பணிநிறுத்தம் நடைபெற்றது. இதனால் கடைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, போக்குவரத்தும், மற்ற சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

தலைநகரில் நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை கண்ணீர் புகை பயன்படுத்தி பலரை கைது செய்தது.

நாட்டின் முக்கிய தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 90 விழுக்காடு துறைகள் முடங்கியதாக தெரிவித்துள்ளது. பிரதிநிதிகள் சபைஇல் நிறைவேற்றப்பட்டுள்ள சீர்திருத்தச் சட்டம், இறுதி ஒப்புதலுக்காக மேலவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset