நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மடானி அரசின் உறுதியான அரசியலும், பொருளாதாரமும் நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்துகிறது”: சைஃபுதீன் நசுதியான்

சுங்கைப்பட்டாணி:

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, அரசியல், பொருளாதார செயல்திறனின் மூலம் அரசின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி வருவதாக டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கெடா மாநில மக்கள் நீதிக்கட்சி தலைவரும், உள்துறை அமைச்சருமான அவர், மூன்று ஆண்டுகளாக தொடரும் சீரான ஆட்சியால் அரசியல் நிலைமை சரியாக இருப்பதுடன், பொருளாதார குறியீடுகளும் முன்னேற்றம் காட்டுகின்றன என்றார்.

எதிரணிகளின் உள் பிரச்சனைகளை நம்பாமல், தங்களின் பலத்தை தாங்களே கட்டியெழுப்புவதே அரசின் வலிமை எனவும் கூறினார்.

தற்போதைய சவால், அரசின் சாதனைகளை மக்களுக்கு தெளிவாகவும் எளிதாகவும் எடுத்துச் சொல்வதுதான் என்றும், அதன்மூலம் தொடர்ச்சியான ஆட்சியின் பயன்களை மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் விளக்கினார். 

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே பிரதமர் தலைமையிலான ஆட்சி நிலவியிருப்பது, முன்பு ஐந்து ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் மாறிய காலத்திலிருந்து வேறுபட்ட நிலைத்தன்மையை காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset