நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பங்சாரில் MMYC இஃப்தார் நிகழ்ச்சி: 500 தஹ்ஃபிஸ் மாணவர்கள், குழந்தைகளுக்கு உதவி

கோலாலம்பூர்:

மலேசிய முஸ்லிம் இளைஞர் கவுன்சில் (MMYC) ஏற்பாடு செய்த இஃப்தார், தொண்டு நிகழ்ச்சி இன்று பங்சாரில் உள்ள மஸ்ஜித் அர்ரஹார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 1,000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த எண்ணிக்கையில், 500 பேர் தஹ்ஃபிஸ் மாணவர்களும்  ஆதரவற்ற குழந்தைகளும் ரமலான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நலத்திட்ட நிகழ்வில் சிறப்பு கவனம் பெற்றனர்.

ஐடில்ஃபிட்ரி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு உதவும் முயற்சியாக ரமலான் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மலேசிய இஸ்லாமிய வளர்ச்சி துறையின் (JAKIM) துணை தலைமை இயக்குநர், டத்தோ முஹம்மத் அஜிப் இஸ்மாயில் திறந்து வைத்தார். சமூகத்தில் ஒற்றுமையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் MMYC-யின் முயற்சியை அவர் பாராட்டினார்.

 இந்த நிகழ்ச்சி இளைஞர்களிடையே தன்னார்வ சேவை உணர்வை வளர்க்கும் முக்கிய தளமாகவும், சமூகத்துக்கும் தேவையுள்ளவர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வழியாகவும் செயல்படுகிறது என்று MMYC தலைவர் முஹம்மத் ரிஃபாயி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ வீர ஷாஹுல் டாவூத், MIMCOIN தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமீத் PV, PRESMA தலைவர் டத்தோ மோசின் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

ரமலான் மாதம் முழுவதும் மேலும் பல தேவைப்படுவோருக்கு உதவ MMYC இவ்வகை நலத்திட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தும் என தெரிவித்தது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset