நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பார்க்கிங் விவகாரம் வன்முறையில் முடிந்தது: கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது

கோலாலம்பூர்: 

செராஸ் பகுதியில் உள்ள செரி மலாக்கா அடுக்குமாடி குடியிருப்பில், பார்க்கிங் விவகாரம் காரணமாக கோபமடைந்த ஒருவர் கத்தியை பயன்படுத்தி ஒருவரை தாக்கிய சம்பவத்தில் காவல் துறை நடவடிக்கை எடுத்தது.

செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், முஹம்மத் ரொஸ்டி டாவூட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் இடது கையில் 3 சென்டிமீட்டர் கத்தி குத்துக்கு காயம் அடைந்தார். அவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“20 வயதுடைய மலாய்க்காரரான சந்தேக நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்," என்று முஹம்மத் ரொஸ்டி கூறினார். சோதனையில் சந்தேக நபருக்கு 10 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் சம்பவத்தின் போது அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset