நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்மாதாங் கெராய் பகுதியில் தீ விபத்து: 21 பேர் பாதிப்பு

கெபாலா பாதாஸ்: 

இன்று காலை, பெர்மாதாங் கெராய் பெசார் பகுதியில் நான்கு வீடுகள் தீயில் எரிந்ததால் 21 பேர் தங்குமிடத்தை இழந்தனர். இந்த தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 5.06 மணிக்கு ஏற்பட்டது.

வீடுகளுக்குள் வசித்தவர்கள் ஒருவரும் உயிரிழக்கவில்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீ பரவியதால் இரண்டு கார்களும், ஐந்து மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகின.

மலேசிய தீயணைப்பு, மீட்புப் துறை அழைப்பை பெற்ற சுமார் 9 நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்றனர். தீயணைப்பு துறை காலை 6.56 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது என தெரிவித்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset