நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“15 நாளில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்கா ஈரானை தாக்கும்”: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு 15 நாளில் அணு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை அடைய வேண்டும். ஒப்பந்தம் மறுக்கப்பட்டால் அமெரிக்கா, ஈரானை தாக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

டிரம்ப் கூறியதாவது, 10 முதல் 15 நாள் காலப்பகுதி மிக நீளமானதாகவும் போதுமானதாகவும் உள்ளது. இதற்கு முன் அவர் 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்ததாக கூறினார். ஈரானுடன் பொருத்தமான ஒப்பந்தம் அடைவது எளிதல்ல; இல்லையெனில் மோசமான நிகழ்வுகள் நிகழும்” என்று டிரம்ப் கூறினார்.

மேலும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஈரானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தும் நடவடிக்கையாகும்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset