செய்திகள் உலகம்
மலைக் குளிரில் காதலியை தனியாக விட்டுச் சென்ற ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
வியன்னா:
ஆஸ்திரியாவின் உயர மலைச் சிகரமான கிராஸ்க்லாக்னரின்(Grossglockner) மலையை ஏறும் போது தனது காதலியை குளிரிலேயே தனியாக விட்டுச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். அந்தச் சம்பவத்தில், 33 வயதான பெண் கடும் குளிரால் உயிரிழந்தார்.
அதிகாலை நேரத்தில் உடல் தளர்ச்சியினாலும், கடும் குளிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை சுமார் 50 மீட்டர் தூரத்தில் விட்டுவிட்டு அவர் தனியாக இறங்கியதாக அரசு தரப்பு கூறுகிறது. மீட்புப் படையினர் மறுநாள் காலை சென்றடைந்தபோது, அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
இந்த மலை ஏற்றத்தை திட்டமிட்டு, அனுபவமற்ற தனது காதலியை கடினமான மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்று, அவசர பாதுகாப்பு உபகரணங்களை எடுத்துச் செல்லாமல் அலட்சியத்துடன் செயல்பட்டதாக அவர் மீது சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் தாய் இந்தச் சம்பவத்தை துரதிர்ஷ்டவசமான விபத்தாகவே பார்க்கிறார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:35 pm
ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி
February 20, 2026, 5:08 pm
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
February 20, 2026, 4:39 pm
அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
February 20, 2026, 12:12 pm
இந்தோனேசியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 19% ஆக குறைப்பு
February 20, 2026, 12:07 pm
ரமலானை முன்னிட்டு காசாவுக்குக் கூடுதல் உதவிகளை அனுப்பிய எகிப்து
February 20, 2026, 11:20 am
“15 நாளில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்கா ஈரானை தாக்கும்”: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 5:19 pm
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
February 19, 2026, 4:09 pm
