செய்திகள் மலேசியா
சபா, சரவாக்கில் இடியுடன் கனமழை பெய்யும்: வானிலைத் துறை எச்சரிக்கை
கோலாலம்பூர்:
இன்று சபா மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான தொடர்ச்சிக் கனமழை பெய்யும் என வானிலைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சண்டாக்கான் பகுதியிலுள்ள பெலுரான், குடாட் பகுதியிலுள்ள கோத்தா மருடு, பிதாஸ் ஆகிய இடங்கள் அதிகமாக பாதிக்கப்படலாம்.
இதனிடையே, சரவாக் மாநிலத்தின் கூச்சிங் நகரிலும், சபா மாநிலத்தின் உள்பகுதிகளான நபாவான், தவாவ் பகுதிகளிலும் இன்று காலை 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில் இருபது மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் அறிகுறிகள் காணப்படும் போது இவ்வகை எச்சரிக்கைகள் வழங்கப்படுவதாகவும், இந்த இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை அதிகபட்சம் ஆறு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சமீபத்திய வானிலை நிலவரங்களை வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், வானிலை துறையின் சமூகத் தொடர்பு ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு 1-300-22-1638 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 12:10 pm
சண்டாக்கானில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
February 20, 2026, 12:08 pm
நூற்றுக்கணக்கான வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்: வெளிநாட்டவர்களுக்குக் கடும் தண்டனை
February 20, 2026, 12:05 pm
'துங்கு புத்ரா' இடைநிலைப்பள்ளியின் ஆசிரியர் குடியிருப்பில் தீ விபத்து: வீடும் வாகனமும் தீக்கிரையாகின
February 20, 2026, 12:04 pm
ரமலான் முதல் நாளில் உறவுகள் வலுப்படும் இனிய தருணங்கள்
February 20, 2026, 10:43 am
நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு பொறுப்பான அரசியல் மிக அவசியமாகும்
February 20, 2026, 10:42 am
“நாட்டில் வேலைவாய்ப்பு நிலை மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது”: பொருளாதார ஆய்வாளர்
February 20, 2026, 9:52 am
ரமலான் சந்தைகளில் சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்: டத்தோ ஹில்மி ஓத்மான்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
