நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளையும், காவல் துறையினரின் குடியிருப்புகளையும் மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்கும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில், இராணுவம், காவல் துறை அதிகாரிகளின் குடியிருப்புகளை சீரமைப்பதற்காக அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டதாகவும், வசதிகளை மேம்படுத்த கூடுதல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், காவல் துறை, குடிநுழைவுத் துறை, கடல்சார் அமலாக்க அமைப்புகளின் பணிகளை பாராட்டிய அவர், அலட்சியம் காட்டாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அன்வர் நினைவூட்டினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset