நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை

புத்ராஜெயா: 

மதப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து மத நடவடிக்கைகளும், வழிபாட்டுத் தலங்களை கட்டுவதும், அரசின் விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்டு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அரசு எந்த மதத்தின் வழிபாடுத் தலங்களையும் அல்லது பிரசார நடவடிக்கைகளையும் தடை செய்யவில்லை என்றாலும், நடைமுறை விதிகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க முடியாது என்று உள்துறை அமைச்சக ஊழியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 

வழிபாடு எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் அல்லது வழிபாட்டுத் தலங்களை எங்கும் அமைக்கலாம் என்ற எண்ணம் தவறானது என்றும், விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இஸ்லாம் மலேசியாவின் கூட்டாட்சி மதமாக இருந்தாலும், அதனை காரணமாகக் கொண்டு பிற மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என்றும், அதேபோல் எந்த மதமும் மற்ற மதங்களை அவமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து தரப்பினரும் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்பதே நாட்டின் அமைதிக்கு அடிப்படை என அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset