செய்திகள் மலேசியா
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
திரெங்கானு:
செத்தியு பகுதியில் உள்ள சுங்காய் மெராங் ஆற்றுமுகம் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் ஆழமின்றி காணப்படுவதால், 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளும், சுற்றுலா படகுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை காரணமாக, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பல சமயங்களில் படகுகளை பல அடி தூரம் தள்ளிச் சென்ற பிறகே கடலுக்குள் செல்ல முடிவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவர்களின் தினசரி வருமானம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக கடலுக்குச் சென்று வரும் மூத்த மீனவர்கள், இவ்வாண்டு நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதாக கூறுகின்றனர். சில நேரங்களில் நீரெழுச்சி வரும் வரை பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழல், திரெங்கானு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிய அறைகூவலாக மாறி வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:29 pm
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
