செய்திகள் மலேசியா
ரோஸ்மாவுக்கு எதிரான நகை வழக்கு: ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பு
கோலாலம்பூர் -
டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிரான நகை வழக்குத் தீர்ப்புக்காக ஜூன் 10ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
40க்கும் மேற்பட்ட நகைகள் தொலைந்து போனது தொடர்பாக, டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிராக லெபனான் நகை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் தாக்கல் செய்திருந்த 14.57 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான வழக்கின் மீதான தீர்ப்புக்கான தேதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
போலிஸ் தலைமை ஆய்வாளர், வழக்கில் மூன்றாம் தரப்பாக உள்ள மலேசிய அரசாங்கத்தின் சார்பில் ஆறாவது சாட்சியான சோங் டோங் லியோங் தனது சாட்சியத்தை நிறைவுசெய்தது.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், நீதிபதி டத்தோ குவே சூன் தீர்ப்புக்கான தேதியை நிர்ணயித்தார்.
வழக்கின் தரப்பினர் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய மே 13 ஆம் தேதியையும், எதிர் வாதங்கள் மே 28 ஆம் தேதியையும் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
தீர்ப்பு ஜூன் 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜூம் வழியாக வழங்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
தேலண்ட் கோர்ப் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
April 15, 2026, 6:45 pm
டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை
April 15, 2026, 4:27 pm
