நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்

புத்ராஜெயா:

நாட்டில் நாளை முதல் டீசல் விலை 75 சென் குறையும் என்று நிதியமைச்சு கூறியது.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களில் ஏற்படும் முதல் விலை வீழ்ச்சியாக, தீபகற்ப மலேசியாவில் நாளை முதல் டீசல் விலை 75 சென் குறையும்.

இதற்கு முன்பு ஒரு லிட்டர் டீசல் விலை 6.72 ரிங்கிட்டாக ஆக இருந்த நிலையில், தற்போது 5.97 ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது.

மானியமில்லாத ரோன் 97, ரோன் 95 ஆகியவற்றின் விலைகளும் தலா 25 சென் குறைந்துள்ளன.

இந்த விலை மாற்றத்தின்படி, நாளை முதல் ரோன் 97 விலை 5.10 ரிங்கிட்டாகவும், மானியமில்லாத ரோம் 95 விலை 4.02 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்  கீழ் வழங்கப்படும் மானிய டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 2.15  ரிங்கிட் என்ற அளவிலேயே நீடிக்கிறது.

இந்த விலைகள் ஏப்ரல் 22 வரை அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset