நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே 1ஆம் தேதிக்குள் 150 கொள்கலன்கள் கொண்ட சட்டவிரோத மின கழிவுகளைத் திருப்பி அனுப்ப இலக்கு: டத்தோ நிக் எசானி

போர்ட் கிள்ளான்:

மே 1ஆம் தேதிக்குள் 150 கொள்கலன்கள் கொண்ட சட்டவிரோத மின கழிவுகளைத் திருப்பி அனுப்ப இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறையின் கிள்ளான் துறைமுகத் தளபதி டத்தோ நிக் எசானி முகமது பைசல் இதனை தெரிவித்தார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு பாதுகாப்பு துறை சட்டவிரோத மின் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை மே 1ஆம் தேதிக்குள் அவற்றின் மூல நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது.

பல்வேறு அமலாக்க முகமைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்ட தொடர்ச்சியான முன்னேற்றத்தைத் தொடர்ந்து இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணிக்கு வெஸ்ட்போர்ட் வழியாக வெற்றிகரமாக வெளியே கொண்டு செல்லப்பட்ட 15 கொள்கலன்கள் கொண்ட முதல் தொகுதியை வழங்கியதைத் தொடர்ந்து இந்தச் சாதனை நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட கப்பல் திங்கட்கிழமை மாலை வெஸ்ட்போர்ட் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

மேலும் செவ்வாய்க்கிழமை காலை கப்பல் துறைமுகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக கொள்கலன்கள் ஏற்றப்பட்டன.

இந்த வார இறுதியில் மேலும் 40 கொள்கலன்கள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள வழக்குகளை அமலாக்கக் குழுக்கள் தொடர்ந்து பரிசீலித்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset