நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்பின் நடவடிக்கைகள் உலகப் போரைத் தூண்டக்கூடும்: துன் மகாதீர் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் நடவடிக்கை, ஒரு பெரிய அளவிலான உலகளாவிய மோதலைத் தூண்டும் அபாயம் உள்ளது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இவ்வாறு எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய அனைத்து கப்பல்களும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த ஜலசந்தி வழியாகச் செல்வதைத் தடுக்குமாறு அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் பிறப்பித்த உத்தரவை மகாதீர் குறிப்பிட்டார்.

ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகு, ஒரு பிரம்மாண்டமான சீன எண்ணெய்க் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்றால் என்ன நடக்கும் என்று நான் வியக்கிறேன்.

இவ்விவகாரத்தில் நிலைமை குழப்பமாகிவிடுமா? ஒரு உலகப் போர் மூளும்.

டிரம்ப் கூட ஒரு உலகப் போரை ஆதரிக்கவில்லை என்று அவர் இன்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

பதற்றம் காரணமாக, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டிரம்ப் முன்னதாக ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் ஒரு நீண்டகால தீர்வை எட்டுவதில் இன்னும் தோல்வியடைந்துவிட்டது.

துரதிர்ஷ்டவசமாக, பேச்சுவார்த்தைகள் ஒரு நிரந்தர போர் நிறுத்தத்தில் முடிவடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset