நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்கு வயது சிறுவன் மீன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

கோலா நெராங்: 

கம்பூங் பெரிக் பகுதியில் உள்ள ஒரு மீன் குளத்தில் மூழ்கியதால், நான்கு வயது சிறுவன் நேற்று மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

மாலை 6.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், அய்யாஷ் அஹ்மத் சாஜித் அஹ்மத் என்ற சிறுவன் குபாங் பாசுவில் உள்ள ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்பே அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

அந்தச் சிறுவன் வீட்டின் அருகே உள்ள மீன் குளம் அருகில் மணலில் விளையாடிக் கொண்டிருந்ததாகப் பெற்றோர் தெரிவித்ததாகப் பாடாங் தெராப் மாவட்ட துணை காவல் துறை தலைவர், துணை கண்காணிப்பாளர் அஃப்ஸானிஷாம் முஹம்மது ஷாம் கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, குழந்தை காணாமல் போனதை கவனித்த பெற்றோர், சுற்றுப்புற பகுதிகளில் தேடத் தொடங்கினர்.

“மீன் குளத்தில் மிதந்த நிலையில் குழந்தையின் காலணியைக் கண்டதையடுத்து சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் குழந்தை மயக்க நிலையில் குளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

“உடனடியாக ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் குழந்தையின் உடல் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியாஹ் மருத்துவமனையில் (HSB) உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மரணத்தின் காரணம் நீரில் மூழ்கியதே என உறுதி செய்யப்பட்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset