நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

H5N1 வைரஸ் தாக்கம்: 2026ஆம் ஆண்டின் முதல் நோயாளர் கம்போடியாவில் பதிவு

ஃப்னோம் பென்: 

கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காம்போட் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயது ஆண் ஒருவருக்கு H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டின் முதல் பாதிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“அந்த நபருக்குக் காய்ச்சல், இருமல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தன,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மருத்துவக் குழுவின் தீவிர சிகிச்சையால் அவர் குணமடைந்து, பிப்ரவரி 14-ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.”

அந்த நபர் துவேக் சோ மாவட்டத்தில் உள்ள மீன்ரித் கிராமமத்தில் வசித்து வருகிறார்.

விசாரணையில் அவரது வீட்டில் கோழிகள் இறந்திருந்ததும், அவற்றை அவர் உடல்நலக்குறைவு ஏற்படும் மூன்று நாட்களுக்கு முன்பு சமைத்து சாப்பிட்டிருந்ததும் தெரிய வந்தது.

நோய்த்தொற்றின் காரணத்தை கண்டறியவும், சமூகத்தில் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைச் சுகாதார அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.

மேலும், பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க பயன்படுத்தப்படும் எதிர்ப்பு மருந்தான Tamiflu (oseltamivir) எனப்படும் மருந்து பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset