செய்திகள் உலகம்
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
பாரிஸ்:
பிரான்சில் 50 வயது பெண், தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு குழந்தைகளின் சடலங்களை மறைத்து வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிரான்சில் கடந்த சில ஆண்டுகளிலிருந்து நடைபெறும் குழந்தை கொலை சம்பவங்களில் புதிதாகும்.
அந்த பெண் பவுலோன்-பில்லன்கோர்ட்டில் கைது செய்யப்பட்டு, தனது பிறந்த குழந்தைகளை குளிர்சாதனத்தில் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று வேறு உறவுகளில் பிறந்த ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.
போலீஸ் விசாரணை நடத்தும்போது, அவர் கர்ப்பத்தை தனக்குத் தெரிந்தவர்களுக்கு மறைத்து வந்ததாக கூறினார். சந்தேக நபரால் தனது குழந்தைகள் எப்போது பிறந்தது என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை.
இதனிடையே சோதனையின் போது, அந்த பெண் பலமுறை அழுந்துக் கொண்டு, குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
$6 மில்லியன் மோசடி: 231 பேரிடம் சிங்கப்பூர் போலிசார் விசாரணை
February 13, 2026, 6:16 pm
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறைகள்: பல்கலைக்கழகத்தில் இருவர் உயிரிழப்பு
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 1:17 pm
