செய்திகள் உலகம்
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் குறிப்பாக போர் முடிவுக்கு வந்துவிட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தினார்.
மேலும், வரும் நாட்களில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.
ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிகையாளர் மரியா பார்டிரோமோவின் இன்ஸ்டாகிராம் பதிவின்படி,
அமெரிக்க அதிபர் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளார் என யூஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானில் போர் முடிந்துவிட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, அது ஆம் முடிந்தது என டிரம்ப் கூறினார்.
நான் சற்று முன்புதான் அதிபருடன் பேசினேன்.
அவர் பொருளாதாரம், ஈரானுடனான போர், நேட்டோ பற்றி விரிவாகப் பேசினார்.
அவருடைய கூற்றுகளில் ஒன்றை நான் மேற்கோள் காட்டுகிறேன் என்று பார்டிரோமோ கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 10:20 am
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
