நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் பிடிவாதத்தால் தோல்வியுற்ற பேச்சுவார்த்தை: உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் ஈரான்

தெஹ்ரான்: 

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டித்த சீனா, ரஷ்யா, துருக்கி, ஸ்பெயின், இத்தாலி, எகிப்து ஆகிய ஆறு நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், வரலாற்று விழுமியங்களின் அடிப்படையிலேயே இந்த நேர்மையான நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் ஈரானின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. 

இதற்குப் பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து 40 நாட்களுக்கும் மேலாக ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், நிரந்தரத் தீர்வைக் காண்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதீத கோரிக்கைகளே இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடையக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. 

அதே வேளையில், இத்தாலிய ஊடகங்களில் வெளியான இஸ்ரேலியர்களின் அத்துமீறல் தொடர்பான படங்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் தூண்டியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset