செய்திகள் மலேசியா
திறந்த வெளி எரிப்பை தவிர்க்க வேண்டும்: தீயணைப்பு துறை எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மலேசியா தீயணைப்பு, மீட்புத் துறை 2026-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை நாடு முழுவதும் ஏறத்தாழ 7,000 திறந்த வெளித் தீப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் காலியான நிலங்களில் ஏற்பட்டுள்ளதாகவும், அவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை இயக்குநர், ஹிஷாம் முஹம்மது கூறுகையில், நீண்ட காலமாக நிலவும் வறண்ட காலநிலையும், மனித அலட்சியமும் தீப்பற்றல் அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன என தெரிவித்தார்.
தீ வேகமாக பரவும் சூழல் உருவாகுவதால், தீயணைப்பு பணியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் திறந்த வெளிகளில் குப்பைகளையோ அல்லது செடிகளை எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், தீப்பற்றல் ஏற்பட்டதை கண்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய ஒத்துழைப்பின் மூலமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என தீயணைப்பு துறை வலியுறுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 3:55 pm
தெமர்லோ தொகுதி யாருக்கு? அமானா - பிகேஆர் இடையே வெடிக்கும் மோதல்
April 15, 2026, 3:53 pm
மைத்துனரைக் கழுத்தறுத்துக் கொன்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
April 15, 2026, 3:28 pm
குடிவரவுத் துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய 119 வெளிநாட்டவர்கள் கைது
April 15, 2026, 3:21 pm
கண்டெடுத்த கைத்துப்பாக்கியை ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கி வைத்த நபருக்குச் சிறை தண்டனை
April 15, 2026, 3:21 pm
ஹம்ஸா எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது தனிநபரின் உரிமை: மொஹைதின்
April 15, 2026, 1:11 pm
ஆஸ்திரேலிய பிரதமர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மலேசியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
