நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் வரவு செலவு திட்டத்தில் குறைந்தப்பட்ச சம்பள உயர்வு; வர்த்தகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்: முகம்மது ஹரிஸ்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் நிறுவனங்கள் சந்தையில் தாக்குப்பிடிக்கவும் வளர்ச்சி காணவும் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு பொருளியல் உத்திகள் இடம்பெற்றன. 

பல்வேறு புதுப்பிக்கப்பட்ட சலுகைகள், திட்டங்கள், உத்திகளாக வடிவம் பெற்றுள்ளன. 

இந்நிலையில், இவ்வாண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு நிறுவனங்களின் கருத்துகளைத் திரட்டப்பட்டுள்ளது.

இதில்  எம்ப்ளாய்மென்ட் பாஸ், எஸ் பாஸ் வேலை அனுமதி அட்டைகளுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. 

இதனால் வர்த்தகங்களுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்று ராயல் கிங்ஸ் கன்சல்டன்சியின் மூத்த வணிக விரிவாக்க மேலாளர் முகம்மது ஹரிஸ் கருத்துரைத்தார்.

திறமைமிக்க வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்ட வர்த்தகங்களின் செலவுகள் அதிகரிக்கும்.

இதனால் அவர்கள் குறைவான திறன்களைக் கொண்ட உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்தப்பட வேண்டும்.

மேலும் திறன் இடைவெளியை நிரப்ப அவர்களைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்குக் அனுப்பவும் வேண்டியிருக்கும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset