செய்திகள் மலேசியா
தேசிய பாதுகாப்பில் புதிய அத்தியாயம்: ஆயுதப் படைத் தளபதியாக மாலேக் ரசாக் தலைமைப் பொறுப்பை ஏற்றார்
கோலாலம்பூர்:
நாட்டின் பாதுகாப்புத் துறை பெரும் அறைகூவல்களை எதிர்கொண்டுவரும் இந்த நேரத்தில், ஜெனரல் டத்தோ மாலேக் ரசாக் சுலைமான் 24-ஆவது மலேசிய ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இது மக்களின் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தவும், அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்புச் சூழல் மேலும் சிக்கலடைந்து வரும் நிலையில், உயர் தலைமைத்துவம் செயல்திறன் மட்டுமின்றி, இராணுவ தொழில்முறை மதிப்பீடுகள், கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பையும் வகிக்க வேண்டும் என்று பாதுகாப்பு புலனாய்வு, தகவல் தொடர்பு பிரிவில் உள்ள ஏடிஎம் தலைமையகம் தாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“தற்போது நாட்டின் இராணுவப்படை அமைப்பு மறுசீரமைப்பு, மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளது. குறிப்பாக நிர்வாக ஒழுங்கு, பொறுப்புணர்வு, தலைமைத்துவ நேர்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
விஸ்மா பெர்தஹானானில் நடைபெற்ற பதவி அணிவிப்பு, நியமன விழாவில், டத்தோ மாலேக் ரசாக் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்த நியமனம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது காலித் நோர்டின் அவர்களால், நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
முன்னதாக மேற்கு மண்டலத் தளபதியாக பணியாற்றிய மாலேக் ரசாக், யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் ஒப்புதலுடன் 24-ஆவது ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆயுதப்படையில் பணியாற்றிய அவர், திறமை, செயல்திறன், சிறப்புத் தன்மை, வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
