செய்திகள் மலேசியா
தேசிய பாதுகாப்பில் புதிய அத்தியாயம்: ஆயுதப் படைத் தளபதியாக மாலேக் ரசாக் தலைமைப் பொறுப்பை ஏற்றார்
கோலாலம்பூர்:
நாட்டின் பாதுகாப்புத் துறை பெரும் அறைகூவல்களை எதிர்கொண்டுவரும் இந்த நேரத்தில், ஜெனரல் டத்தோ மாலேக் ரசாக் சுலைமான் 24-ஆவது மலேசிய ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இது மக்களின் நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்தவும், அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்புச் சூழல் மேலும் சிக்கலடைந்து வரும் நிலையில், உயர் தலைமைத்துவம் செயல்திறன் மட்டுமின்றி, இராணுவ தொழில்முறை மதிப்பீடுகள், கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பையும் வகிக்க வேண்டும் என்று பாதுகாப்பு புலனாய்வு, தகவல் தொடர்பு பிரிவில் உள்ள ஏடிஎம் தலைமையகம் தாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“தற்போது நாட்டின் இராணுவப்படை அமைப்பு மறுசீரமைப்பு, மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளது. குறிப்பாக நிர்வாக ஒழுங்கு, பொறுப்புணர்வு, தலைமைத்துவ நேர்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
விஸ்மா பெர்தஹானானில் நடைபெற்ற பதவி அணிவிப்பு, நியமன விழாவில், டத்தோ மாலேக் ரசாக் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்த நியமனம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது காலித் நோர்டின் அவர்களால், நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
முன்னதாக மேற்கு மண்டலத் தளபதியாக பணியாற்றிய மாலேக் ரசாக், யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் ஒப்புதலுடன் 24-ஆவது ஆயுதப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆயுதப்படையில் பணியாற்றிய அவர், திறமை, செயல்திறன், சிறப்புத் தன்மை, வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:16 pm
இந்து சமயம், ஆலயத்தை அவமதிப்பவர்களின் கொட்டத்தை கூட்டுப் பிரார்த்தனைகள் அடக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 3, 2026, 8:17 pm
அரச மன்னிப்பு அதிகாரம் என்பது அரசியல் பரிசு அல்லது தனிப்பட்ட அனுதாபம் அல்ல: பகாங் சுல்தான்
February 3, 2026, 8:08 pm
பயணியிடம் பாலியல் தொல்லை புரிந்த ஈ ஹெய்லிங் ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து: அந்தோனி லோக்
February 3, 2026, 6:03 pm
தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், சிலாங்கூர் மாநிலத்திற்குச் செல்லும் பேருந்தில் கைது
February 3, 2026, 5:55 pm
முன்னாள் காதலியின் மீது கோபம்: பெட்ரோல் ஊற்றி, வீட்டில் தீ வைத்து தாக்கிய நபர் கைது
February 3, 2026, 3:24 pm
