செய்திகள் மலேசியா
6 வயதில் முதலாம் ஆண்டு கல்வி முறையைத் தொடங்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது: பிரதமர் அன்வார்
செமினி:
ஆறு வயதில் முதலாம் ஆண்டு கல்வி முறையைத் தொடங்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பல எதிர்ப்புகளைப் பெற்ற போதிலும், 2027 முதல் ஆறு வயது குழந்தைகளுக்கான முதல் ஆண்டு கல்வி முறையைத் தொடங்குவதற்கான அதன் முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
100க்கும் மேற்பட்ட நாடுகள் இதற்கு முன்பு இந்த முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஆக இதில் மலேசியா பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
எனவே, எதிர்காலத்தில் புதிய முறையைப் பின்பற்ற பெற்றோர்கள் ஒத்துழைப்பார்கள்.
இரண்டு அல்லது மூன்று பேர், தாங்கள் தயாராக இல்லை, குழந்தை இன்னும் முதிர்ச்சியடையவில்லை, குழந்தை இன்னும் பால் குடிக்கிறது என்று புலம்பட்டும்.
நாம் ஏன் பின்னோக்கிச் செல்ல வேண்டும்? நாம் முன்னேற வேண்டும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 5:31 pm
ரஃபிசி மகன் தாக்குதல் வழக்கு: விசாரணை தகவல்கள் தர உள்துறை அமைச்சகம் மறுப்பு
January 28, 2026, 3:48 pm
பத்துமலைக்கு வரும் பிரதமரிடம் புதிய கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாது: டான்ஸ்ரீ நடராஜா
January 28, 2026, 3:42 pm
9 மணி நேரம் காரில் சிக்கிய சிறுவன் மரணம்: சிரம்பானில் சம்பவம்
January 28, 2026, 9:20 am
கேப்டன் பிரபா கும்பலைச் சேர்ந்த 3 பேர் இன்று காலை கேஎல்ஐஏ விமான நிலையத்தை வந்தடைந்தனர்
January 27, 2026, 8:16 pm
மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: சுற்றுச் சூழல் அமைச்சர் ஆர்தர் ஜோஸப் குருப்
January 27, 2026, 7:58 pm
