செய்திகள் வணிகம்
இராணுவ நிதியத்தின் வலுவான செயல்திறன்: 5.35% லாபப் பங்கு வழங்கல்
கோலாலம்பூர்:
இராணுவ நிதிய வாரியம் 5.35 சதவீத லாபப் பங்கினை அறிவித்துள்ளது. 2025 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்காக மொத்தம் 524.74 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்த அளவு ஆகும்.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின், இந்த சாதனை மலேசிய ஆயுதப்படை உறுப்பினர்களின் நீண்டகால நிதி நலனை பாதுகாக்கும் வாரியத்தின் உறுதியை வெளிப்படுத்துவதாக கூறினார்.
அந்த நிதியாண்டில் முதலீட்டு வருமானம் 749.49 மில்லியன் ரிங்கிட் ஆகவும், பகிரக்கூடிய இலாபம் 541.56 மில்லியன் ரிங்கிட் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கையிருப்பு தொகை 29.1 சதவீதம் அதிகரித்து 1.31 பில்லியன் ரிங்கிட் ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 1.01 பில்லியன் ரிங்கிட் உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
இந்த அறிவிப்பு தொடர்ந்து நான்காவது ஆண்டாக 5 சதவீதத்திற்கும் அதிகமான லாபப் பங்கு வழங்கப்பட்டதை குறிக்கிறது.
இராணுவ நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி முஹம்மத் அஷ்ரஃப் முஹம்மத் ரட்ஸி, திட்டமிட்ட நிர்வாக மாற்றங்களும் நீண்டகால முதலீட்டு மேலாண்மையும் இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.
மேலும், எதிர்கால வளர்ச்சிக்கும் நிறுவனம் உறுதியான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
