செய்திகள் வணிகம்
இராணுவ நிதியத்தின் வலுவான செயல்திறன்: 5.35% லாபப் பங்கு வழங்கல்
கோலாலம்பூர்:
இராணுவ நிதிய வாரியம் 5.35 சதவீத லாபப் பங்கினை அறிவித்துள்ளது. 2025 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்காக மொத்தம் 524.74 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் உயர்ந்த அளவு ஆகும்.
பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் காலிட் நோர்டின், இந்த சாதனை மலேசிய ஆயுதப்படை உறுப்பினர்களின் நீண்டகால நிதி நலனை பாதுகாக்கும் வாரியத்தின் உறுதியை வெளிப்படுத்துவதாக கூறினார்.
அந்த நிதியாண்டில் முதலீட்டு வருமானம் 749.49 மில்லியன் ரிங்கிட் ஆகவும், பகிரக்கூடிய இலாபம் 541.56 மில்லியன் ரிங்கிட் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கையிருப்பு தொகை 29.1 சதவீதம் அதிகரித்து 1.31 பில்லியன் ரிங்கிட் ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 1.01 பில்லியன் ரிங்கிட் உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
இந்த அறிவிப்பு தொடர்ந்து நான்காவது ஆண்டாக 5 சதவீதத்திற்கும் அதிகமான லாபப் பங்கு வழங்கப்பட்டதை குறிக்கிறது.
இராணுவ நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி முஹம்மத் அஷ்ரஃப் முஹம்மத் ரட்ஸி, திட்டமிட்ட நிர்வாக மாற்றங்களும் நீண்டகால முதலீட்டு மேலாண்மையும் இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.
மேலும், எதிர்கால வளர்ச்சிக்கும் நிறுவனம் உறுதியான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 12:21 pm
எண்ணெய் விலை நிலைத்ததைத் தொடர்ந்து ரிங்கிட் தொடர்ந்து உயர்வு
March 11, 2026, 11:57 am
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடிவுக்கு வந்த எம்.பி.ஓ திரைப்பட நிறுவனம்
March 10, 2026, 3:46 pm
போர்ப்பதற்றத்தின் தாக்கம்: செம்பனை எண்ணெயின் விலை 10% உயர்வு
March 10, 2026, 10:15 am
ஈரான், அமெரிக்க பதற்றத்தின் மத்தியில் ரிங்கிட் வலுவான தொடக்கம்
March 9, 2026, 2:00 pm
வரலாறு காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை
March 6, 2026, 11:24 am
மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த முதலீடு: கடந்த ஆண்டு 426.7 பில்லியன் பதிவு
March 5, 2026, 4:14 pm
மார்ச் 5 முதல்–11 வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு
March 5, 2026, 4:13 pm
