செய்திகள் மலேசியா
ஈப்போவில் இரு ஆலயங்களுக்கான நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பிறந்தது: சிவநேசன்
ஈப்போ:
பேரா மாநிலத்தில அரசாங்க நிலங்களில் கட்டப்பட்டுள்ள மேலும் இரு ஆலய நில விவகாரங்களுக்கு தீரவு பிறந்துள்ளது.
பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.
ஈப்போ கம்போங சீமி எனும் இடத்தில் தாமான பிந்தாங் பாலும், தாமான் மிரின்டியில் உள்ள அருள் மிகு கன துர்கை அம்மன் ஆலயம், ஈப்போ தாமான் மாணிக்கவசகம் குடியிருப்பில் உள்ள மதுரை வீரன் ஆலயம் பல ஆண்டுகள் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலையில் மாநில அரசாஙக செயலகத்தில் மாநில நில அலுவலகம் மற்றும் ஆலய பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் இந்த விவகாரத்திற்கு தீர்வு பிறந்துள்ளது என்று மாநில இந்தியர் விவகாரங்களுக்கான தலைவருமான அவர் தெரிவித்தார்.
மாநில அரசாங்க நிலங்களில் கட்டபட்டுள்ள ஆலயங்களை அகற்ற நில அலுவலம் நடவடிக்கையை மேற்கொண்டது.
இம்மாநிலத்தில் அரசாங்க நிலங்களில் கட்டப்பட்ட ஆலயங்களின் நிலப் பிரச்சனைக்கு தீ்ர்வுக் கண்டுள்ளதை அவர் நினைவுக் கூர்ந்தார்..
பேரா மாநிலத்தில் ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரசசனைகளுக்கு படிபடியாக தீர்வுக்காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
மேலும் பேசிய அவர் அடுத்தமாதம் தைப்பூச விழா நடபெறவிருக்கிறது. அவைகள் சிறப்பான முறையில் நடைபெற மாநில அரசாங்கம் முழு ஒத்திழைப்பை வழங்கும் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 5:40 pm
தோமி தோமஸ் வழக்கின் தீர்வு நஜிப்பிற்கு கிடைத்த வெற்றி: ஷாபி அப்துல்லா
January 19, 2026, 5:40 pm
சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் வருமானத்தை அறிவிக்க வேண்டும்
January 19, 2026, 5:38 pm
தைப்பூச பக்தர்களுக்காக்க புந்தோங் சுங்கை பாரி மேம்பாலம் தற்காலிகமாக திறக்கப்படும்: துளசி
January 19, 2026, 4:05 pm
கினாபத்தாங்கானில் நடந்த கொடூரம்: செம்பனைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை
January 19, 2026, 3:22 pm
ஷா ஆலாமில் கடத்தப்பட்ட காரும், 13 வயது சிறுமியும் பாதுகாப்பாக மீட்பு
January 19, 2026, 3:03 pm
ஸ்டார் ட்யூட்டர் ஏற்பாட்டில் 350 மாணவர்களுக்கு சிறப்பு செய்த ஸ்டார் விருது விழா
January 19, 2026, 2:52 pm
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கிய புதிய இடம் தயாராக உள்ளது: ஹன்னா இயோ
January 19, 2026, 2:51 pm
