நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள்

கோலாலம்பூர்:

சவூதி அரேபியாவில் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஜெட்டாவில் உள்ள தூதர் தெங்கு தசாரிஃப் ராஜா அப்துல் காதிர் இதனை தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் மோதல்கள் காரணமாக பல விமான நிறுவனங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாலும், அவற்றின் செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறுகளாலும் சுமார் 1,600 மலேசிய உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெட்டா, மெக்கா, மதீனாவில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான யாத்ரீகர்களை தனது குழுவினர் தொடர்பு கொள்ள முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ் அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

மேலும் சவுதி அரேபியாவில், குறிப்பாக மெக்கா, மதீனா, ஜெட்டாவில் நிலைமையும் எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் மிகவும் நன்றாக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset