நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துர்நாற்றம் வீசிய பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன

பாயான் லெப்பாஸ்:

துர்நாற்றம் வீசிய பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று இங்குள்ள தெலுக் கும்பரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டிய வீட்டின் கதவைத் திறக்க தீயணைப்புப் படையினருக்கு வந்த சிறப்பு அழைப்பு, ஒரு வயதான பெண், ஒரு ஆணின் உடல்களைக் கண்டெடுக்க வழிவகுத்தது.

தாய், குழந்தை வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அவர்களின் அண்டை வீட்டார் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.

தனது துறைக்கு இரவு 7.48 மணிக்கு அழைப்பு வந்தது.

மேலும் பூட்டிய வீட்டின் கதவை உள்ளே இருந்து திறக்க உதவி கோரி போலிசாரிடம்  இருந்து அழைப்பு வந்தது.

மேலும் வீட்டில் ஒரு பாதிக்கப்பட்டவர் இருப்பதாக நம்பப்படுகிறது.
அதிகாரிகள் வரவேற்பு அறை, படுக்கையறையில் மயக்கமடைந்த நிலையில் இரண்டு பாதிக்கப்பட்டவர்களைக் கண்டதாகக் அவர் கூறினார்.

இருவரும் மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவால் அந்த இடத்தில் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இருவரின் உடல்களும் வழக்கும் மேலதிக நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset