நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலையா அல்லது பந்தயப் பாதையா? ; அதிகரிக்கும் இரவு விபத்து

கோலாலம்பூர்:

வார இறுதி இரவு நேரங்களில், சில சாலைகள் அனுமதியற்ற பந்தயப் பாதையாக மாறி வருகின்றன. வாகனங்களின் சத்தம், யார் வேகமானவர் என்ற போட்டி, நண்பர்களின் உற்சாகக் குரல்கள், இவை அனைத்தும் ஆபத்தான சூழலை உருவாக்குகின்றன. சமிக்ஞை விளக்குகள் கூட பந்தயத்தின் தொடக்கக் புள்ளியாகப் பார்க்கப்படுகின்றன.

இவ்வாறு நடக்கும் போட்டியே, இறுதியில் விபத்தாக மாறுகிறது. பலத்த மோதல் சத்தம் இரவை சிதறடிக்க, சில நொடிகள் முன் தன்னம்பிக்கையுடன் இருந்த இளைஞன் சாலையில் உயிரிழந்து கிடக்கிறார். சிரிப்பும் ஆரவாரமும் இருந்த இடத்தில் திடீரென அமைதி நிலவுகிறது.

திட்டமிட்டபோது தவறு என அனைவரும் அறிந்திருந்தாலும், அது தமக்கோ நண்பர்களுக்கோ நடக்கும் வரை ஆபத்து உணரப்படுவதில்லை. உண்மையான தைரியம் அதிக வேகத்தில் செல்லுவதில் அல்ல; நேரத்தில் நிறுத்திக் கொள்வதில்தான் உள்ளது. உயிர் நின்ற பின் வருத்தம் பயனற்றது என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் கடும் உண்மை.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset