நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

SIMS அமைப்பின் ஏற்பாட்டில் சட்ட சபையில் சமூக நீதி குரல் - நூல் அறிமுகமும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும்

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் டூத்தா விலாயா பள்ளிவாசலில் உள்ள டேவான் முஸ்லிமாட் மண்டபத்தில் ம ஜ க தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி அவர்களின் சட்ட சபையில் சமூக நீதி குரல் - நூல் வெளியீடு நடைபெற இருக்கிறது என்று சிம்ஸ் அமைப்பின் தலைவர் டத்தோ எம் இசட் கனி கூறினார்.

இந்த நிகழ்ச்சி 04-03.26, புதன், மாலை 6.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி M.A .  Ex, MLA கலந்து கொண்டு பேச இருக்கிறார்.

டத்தோ வீரா. சாகுல் தாவூத் நூல் வெளியிட்டு உரையாற்றுகிறார் என்று டத்தோ M. Z . கனி கூறினார்.

தொடர்ந்து வசதி குறைந்த பிள்ளைகளுக்கு பெருநாள் உதவிப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது

நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு எம். இசட். கனி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புக்கு:
டத்தோ ஷேக் ஜமீல் (+60126668453)

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset