நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் பதவிக்கால மசோதா தோல்வி அடைந்தது ஏன்?; சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர்; சிலர் மருத்துவமனையில் இருந்தனர்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மக்களவையில் பிரதமரின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் நேற்றைய வரைவுச் சட்டம் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெறத் தவறிவிட்டது.
மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் தேசிய முன்னணியை சேர்ந்தவர்கள்.

தலா ஒரு ஜி.பி.எஸ், ஜி.ஆர்.எஸ், பி.பி.எம்  கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தை ஆதரித்த இரண்டு சுயேச்சை உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் இருப்பது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது உட்பட பல்வேறு காரணங்களைக் கூறியதாக ஃபஹ்மி கூறினார்.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது குறித்து அரசு ஆதரவாளர்கள் சங்கம், தலைமை அலுவலகத்திடம் விசாரித்தோம்.

நம்பிக்கை கூட்டணி தொகுதியில் இருந்து, 100 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொண்டனர், அனைவரும் வாக்களித்தனர் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset