நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்

சவூதி அரேபியா:

அமெரிக்கா  இஸ்ரேல் மீதான் நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்.

ஈரானிய புரட்சிகர காவல்படை செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி இவ்வாறு எச்சரித்தார்.

இன்று, ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ட்ரோன்கள் தாக்கின, அதே நேரத்தில் மேற்கு ஆசியா முழுவதும் தொழில்துறை, இராஜதந்திர வசதிகளை குறிவைத்து ஈரான் பதிலடி கொடுத்ததால் வளைகுடா நகரங்களில் பல வெடிச்சத்தங்கள் கேட்டன.

இன்று, ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ட்ரோன்கள் தாக்கின.

அதே நேரத்தில் மேற்கு ஆசியா முழுவதும் தொழில்துறை மற்றும் இராஜதந்திர வசதிகளை குறிவைத்து ஈரான் பதிலடி கொடுத்ததால் வளைகுடா நகரங்களில் பல வெடிச்சத்தங்கள் கேட்டன.

ஈரானின் உயர்மட்டத் தலைவரைக் கொன்று வட்டாரல் போரை ஏற்படுத்திய அமெரிக்க, இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, சவுதி தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சுவர்கள், கூரையில் புகை, சேதம் ஏற்பட்டதை பத்திரிகையாளர் ஒருவர் கண்டார்.

சவூதி காவல்துறையினர் தூதரக வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

பல முக்கிய சாலைகளை மூடிவிட்டனர்.

இந்த தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று சவுதி வெளியுறவு அமைச்சு விவரித்தது.

பஹ்ரைன், கத்தாரில் பத்திரிகையாளர்கள் வெடிப்புகள் மற்றும் சைரன்கள் சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset