நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்தில்கொண்டு பயணிகளிடம் கூடுதல் பாதுகாப்புச் சோதனை: உட்லண்ட்ஸ் (Woodlands) சோதனைச் சாவடியில் சோதனைகள் தீவிரம்

சிங்கப்பூர்:

உட்லண்ட்ஸ் (Woodlands) சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகளினால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்தது.

மலேசியா - சிங்கப்பூர் நுழைவாயில்களில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்தில்கொண்டு பயணிகளிடம் கூடுதல் பாதுகாப்புச் சோதனை நடத்தப்படுகிறது.

தரை, ஆகாயம், கடல் வழி வரும் பயணிகள் அனைவரும் சோதிக்கப்படுகின்றனர்.

சரக்குக் கப்பல்களும் வாகனங்களும் சோதிக்கப்படுகின்றன.

சோதனை நடவடிக்கைகள் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது.

இந்தக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகச் சோதனைச் சாவடிகளைக் கடந்துசெல்ல அதிக நேரம் ஆகலாம்.
இதனால் பயணங்கள் தாமதமாகலாம் என்று ஆணையம் கூறியது.

- ரோஷித் அலி  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset