நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்

வாஷிங்டன்: 

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா இணைந்ததைக் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வழங்கிய விளக்கங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரான் முதலில் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக நம்பியதால், அமெரிக்க படையினரை இஸ்ரேல் தாக்குதலில் இணைக்க உத்தரவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். “நாம் முன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் முதலில் தாக்கியிருப்பார்கள்; அதில் எனக்கு உறுதி உள்ளது” என்று அவர் கூறினார். “இஸ்ரேல் அமெரிக்காவை இந்த போரில் இணைத்தது” என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

ஆனால், ரூபியோ முந்தைய நாள் அளித்த விளக்கத்தில், இஸ்ரேல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது தெரிந்ததால், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து அமெரிக்க படைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் தாக்குதல், தூண்டுதல் இல்லாதது என ஈரான் தெரிவித்துள்ளது.  மேலும், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஈரான் தாக்கத் தயாராக இருந்ததாக டிரம்ப் கூறியுள்ளதுடன், அதற்கு ஆதாரம் எதுவும் வெளியிடப்படவில்லை. 

அமெரிக்க தரப்பினர், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் ஈரான் அவற்றை அனுமதிக்கும் திட்டத்தை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset