நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பொங்கல் விழா நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இப்பொங்கல் விழா நாளை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பத்துமலை, கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஆகியவற்றில் கொண்டாடப்படும்.

சிறப்பு பூஜைகளுக்கு பின் அனைத்து ஆலயங்களின் பொங்கல் வைக்கப்படும். அதே வேளையில்  பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா வரும் ஜனவரி 17ஆம் தேதி காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை வரை பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஹிமாவுடன் இணைந்து பொங்கல் வைக்கப்படவுள்ளது.

அதன்பின் கோலாட்டம், மயிலாட்டம், உறுமிமேளம், நாதஸ்வரம், பரதம், புலியாட்டம் உட்பட பல பாரம்பரிய நடன நிகழ்வுகள் நடைபெறும்.

அதே வேளையில் பூக் கட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல், உறி அடித்தல், தோரணம் பின்னுதல் போட்டிகளும் நடத்தப்படும்.

ஆக மொத்தத்தில் இந்த ஒற்றுமை பொங்கல் விழா பாரம்பரியத்துடனும் கலாச்சாரத்துடனும் நடத்தப்படும்.

எனவே பொதுமக்கள் திரளாக வந்து இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset