நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஆலயப் பிரச்சினை தொடர்பாக கூட்டத்தை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்ய வேண்டும்: போலிஸ்

ஜார்ஜ்டவுன்:

ரமலானின் புனிதத்தை மதித்து பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இந்த சனிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்த சில தரப்பினர்  திட்டமிட்டுள்ளதை ரத்து செய்யுமாறு பினாங்கு போலிஸ் அறிவுறுத்துகிறது.

இதனை மீறினால் ஏற்பாட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என்று மாநில போலிஸ் தலைவர் அசிஸி இஸ்மாயில் கூறினார்.

புனித ரமலான் மாதத்தின் புனிதத்தைப் பாதுகாக்கவும், பினாங்கில் அமைதி மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்கவும் முன்மொழியப்பட்ட கூட்டத்தை ரத்து செய்யுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்றார் அவர்.

முன்னதாக, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு முன்னால்  உள்ள ஆலயத்தை இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறும் முகநூல் பதிவு தொடர்பாக ஜெலுடோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் போலிசில் புகார் அளித்தார்.

பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவரான அவர், ஜம்ரி வினோத் இன,  மத பதற்றத்தைத் தூண்டக்கூடிய ஆத்திரமூட்டும் உள்ளடக்கத்தை பதிவேற்றியதாகக் கூறினார்.

இந்த விஷயம் தொடர்பாக இதுவரை போலிசாருக்கு ஏழு புகார்கள் கிடைத்துள்ளதாக அசிஸி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset