செய்திகள் மலேசியா
எட்டு மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்ட ஆடவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்
கோலாலம்பூர்:
செராஸ் பகுதியில் உள்ள தாமான் மீடா மேம்பால நகர ரயில் நிலையத்தின் உயரமான பகுதியில் சிக்கியிருந்த நபர் ஒருவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளது.
காணொளியில், கருப்பு குறுநீள உடை அணிந்த நபர் குறுகிய விளிம்பில் நடந்து கொண்டிருந்தார். பின்னர் சுமார் எட்டு மீட்டர் உயரத்தில் சுவரை ஒட்டி நின்றபடி ஒரு கம்பியை ஒரு கையால் பற்றிக்கொண்டிருந்தார். அவர் தவறினால் கடுமையான காயம் ஏற்படும் அபாயம் நிலவியது.
இந்நிலையில், இரு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவரை பற்றிக் காப்பாற்றினர். மேலும் சிலர் இணைந்து அந்த நபரை பாதுகாப்பாக கீழிறக்கினர்.
மீட்பு வெற்றியடைந்ததும் அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று, தீயணைப்பு வீரர்களின் துரிதமும் தொழில்முறையும் பாராட்டப்பட்டு வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
மலேசியர்களின் நலன், பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்: ஃபஹ்மி
March 4, 2026, 4:16 pm
பிலிப்பைன்ஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஃபார்ம் ஃப்ரெஷ் இயக்குநர் ஜேக்கப் உயிரிழந்தார்
March 4, 2026, 3:28 pm
தொழிலாளர் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுப்பு
March 4, 2026, 2:55 pm
டாய்ம் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே எம்ஏசிசியை தொடர்பு கொண்டார்: அசாம் பாக்கி
March 4, 2026, 2:54 pm
