செய்திகள் மலேசியா
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
கோலாலம்பூர்:
தொழுகைக்கூடம், வசதியான உறங்மிடங்கள், மின்சாரம், நீர் வசதி உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் இயங்கிய சட்டவிரோத வெளிநாட்டு குடியிருப்பு ஒன்று, ஜாலான் கிளாங் லாமா அருகிலுள்ள பந்தாய் பாரு பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குடியிருப்பு இன்று அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையால் சோதனை செய்யப்பட்டது.
அங்கு வசித்து வந்த ஹெர்மன் (30 வயது), கடந்த ஓர் ஆண்டாக மனைவியுடனும் குழந்தையுடனும் தங்கி வருவதாகவும், மாதம் 350 ரிங்கிட் வாடகை செலுத்துவதாகவும் கூறினார். இதுவரை எந்தச் சோதனையும் நடந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
சோதனையில், குறுகிய வழித்தடங்களுடன் இணைக்கப்பட்ட சமையலறை, கழிப்பறை, வரவேற்பறை என குறைந்தது ஐந்து அறைகள் கொண்ட ஒழுங்கமைந்த கட்டமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு வார கால ரகசிய தகவல்களின் அடிப்படையில், அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய அதிரடி நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் வந்ததும் அனைத்து வெளிநாட்டவர்களும் அச்சத்தில் ஓடி ஒளிந்தனர்; சிலர் கூரைகளில் ஏறினர், சிலர் கதவுகள், கழிப்பறைகளின் பின்னால் மறைந்தனர், சிலர் அறைகளில் பூட்டிக் கொண்டனர்.
இதுகுறித்து குடிவரவு துறை துணை தலைமை இயக்குநர் டத்தோ லுக்மான் எஃபெண்டி ரம்லி கூறுகையில், இந்த நடவடிக்கையில் 37 ஆண்கள், 34 பெண்கள் என மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியர்கள் 66 பேர், மியான்மார் 3 பேர், இந்தியா 1, பாகிஸ்தான் 1 நாட்டு குடிமக்கள் உள்ளனர். அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி மலேசியாவில் தங்கி இருப்பதுடன், செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குடிவரவு சட்டம் பிரிவு 15(1)(c) , 6(1)(c) கீழ் விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
மலேசியர்களின் நலன், பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்: ஃபஹ்மி
March 4, 2026, 4:16 pm
பிலிப்பைன்ஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஃபார்ம் ஃப்ரெஷ் இயக்குநர் ஜேக்கப் உயிரிழந்தார்
March 4, 2026, 3:30 pm
எட்டு மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்ட ஆடவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்
March 4, 2026, 3:28 pm
தொழிலாளர் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுப்பு
March 4, 2026, 2:55 pm
டாய்ம் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே எம்ஏசிசியை தொடர்பு கொண்டார்: அசாம் பாக்கி
March 4, 2026, 2:54 pm
