செய்திகள் மலேசியா
பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மூன்று மாத குழந்தைக்கு கால் எலும்பு முறிவு
கோலாலம்பூர்:
கடந்த வியாழக்கிழமை அன்று மூன்று மாதங்களான ஆண் குழந்தையின் பெற்றோர், சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அக்குழந்தையின் காலெலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதற்கு முன், அந்த குழந்தை தாமன் கோபராசி போலிஸ் பகுதியில் உள்ள ஒரு பராமரிப்பாளர் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தது. பின்னர் பெற்றோர் குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றபோது, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததை கவனித்தனர். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், குழந்தையின் இடது தொடை எலும்பு முறிந்திருப்பது உறுதியாகி, இதனைத் தொடர்ந்து போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் இடது தொடைப் பகுதியில் வீக்கம் இருப்பதை கண்டறிந்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.38 மணிக்கு போலீஸ் புகார் பெறப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
“அம்பாங் மருத்துவமனையில் பணிபுரியும் 27 வயதுடைய மருத்துவர், குழந்தையின் இடது தொடை எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் போலீஸ் புகார் அளித்துள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் (Akta Kanak-kanak 2001) பிரிவு 31(1)(a)ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஃபாடில் கூறினார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
