செய்திகள் மலேசியா
உரிமம் இன்றி இயங்கிய மர தொழிற்சாலைகள் மீது வனத்துறையின் அதிரடி சோதனை
தெமெர்லோ:
பகாங் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மர அடிப்படையிலான தொழில் சோதனையில், அனுமதியின்றி செயல்பட்ட எட்டு மரத் தொழிற்சாலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநில வனத்துறையின் அமலாக்கப் பிரிவு அதிகாரி முஹம்மத் முஸ்தகிம் செமைல் கூறுகையில், உரிமம் இன்றி தொழில் நடத்துவோருக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும், தேசிய வனச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பேராக் மாவட்டத்தில் உள்ள ட்ரியாங் பகுதியில் மர திரை தயாரிப்பு தொழிற்சாலையில் நடத்திய சோதனையில், உரிமம் இன்றி செயல்பட்டது கண்டறியப்பட்டது. அங்கிருந்து 22 இயந்திரங்கள், அதில் மரப்பட்டை பின்னும் நான்கு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்காலிகமாக மூடும் அறிவிப்பு வழங்கப்பட்டு, விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டது.
மூன்று நாள் நீடிக்கும் இந்த நடவடிக்கையில் 40-க்கும் மேற்பட்ட அமலாக்க அதிகாரிகள் பல துறைகளின் ஒத்துழைப்புடன் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் சோதனை நடத்தும் போது, உரிமம் தேவைப்படுவது தெரியாது என உரிமையாளர்கள் காரணம் கூறினாலும், சட்டம் அனைவருக்கும் கட்டாயமாகும் என்பதை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
மலேசியர்களின் நலன், பாதுகாப்பு அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்: ஃபஹ்மி
March 4, 2026, 4:16 pm
