செய்திகள் உலகம்
ஈரானில் பொருளாதார நெருக்கடி : 111 நகரங்களில் அரசு எதிர்ப்பு போராட்டம்
டெஹ்ரான்:
கடந்த டிசம்பர் 28 முதல் ஈரானில் தொடங்கிய அரசு எதிர்ப்பு போராட்டங்கள், தற்போது வன்முறையாக மாறி, நாட்டின் 31 மாநிலங்களில் உள்ள 111 நகரங்களுக்கும் ஊர்களுக்கும் பரவியுள்ளது.
பொருளாதார நெருக்கடி, நாணய மதிப்பு வீழ்ச்சி, 40 சதவீதத்தைத் தாண்டிய பணவீக்கம் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி பதிலளித்தனர்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் செய்தி நிறுவனம் (HRANA) தகவலின்படி, போராட்டம் 111 நகரங்களுக்கு பரவியுள்ளது.
பார்ஸ் செய்தி நிறுவனம், குறைந்தது 34 போராட்டக்காரர்களும் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 2,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம், டெஹ்ரானில் வியாபாரிகள் ரியால் நாணயத்தின் கடும் வீழ்ச்சியை எதிர்த்து தொடங்கியது. பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்ததால், நாடு முழுவதும் பரவியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வன்முறை தொடர்ந்தால் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த போராட்டம், 2022-ஆம் ஆண்டு மஹ்சா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சிக்குப் பின், மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
நிலைமையை சமாளிக்க ஈரான் அரசு, 71 மில்லியன் மக்களுக்கு மாதந்தோறும் 7 அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. எனினும், அதிகரிக்கும் மக்களது கோபம் காரணமாக, ஈரான் கடும் அரசியல், சமூக சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்கா ஈரானில் போராட்டங்கள் நடக்க ஊக்குவிப்பதாக கருதப்படுகிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலின் விளைவாக பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக கூறப்படுகிறது.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
January 9, 2026, 6:34 pm
சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை
January 9, 2026, 6:28 pm
இரண்டு நாள்களில் அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய 2 துப்பாக்கிச்சூடுகள்
January 8, 2026, 12:49 pm
பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்
January 5, 2026, 3:35 pm
