நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு

ஷாஆலம்:

கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணமடைந்தார்.

சிலாங்கூர் மாநில போலிஸ் படையின் துணைத் தலைவர் முகமட் ஜைனி அபு ஹசான் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று கிள்ளானில் உள்ள தாமான் வங்சாவில் நடந்த ஒரு சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கிள்ளான் தெற்கு மாவட்ட போலிஸ் தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​43 வயதுடைய பாதிக்கப்பட்டவரின் உடலை போலிசார் கண்டுபிடித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் பாதிக்கப்பட்டவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது.

தென் கிள்ளான் போலிஸ் தலைமையகத்தில் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset