நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் நிதி வரவேற்கத்தக்கது; தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

தமிழ்ப்பள்ளிகளுக்காக அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தமிழ்ப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதிகை ஒதுக்கினார்.

சுமார் 50 மில்லியன் ரிங்கிட்டை அவர் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கினார்.

அரசாங்கத்தின் இந்த ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.

இருந்தாலும் இந்நிதி தமிழ்ப்பள்ளிகளுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளை சீரமைக்கவும் மேம்பாட்டிற்கு இந்நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

அதே வேளையில் நாட்டில் பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

இப்பள்ளிகளை வேறு இடங்களுக்கு மாற்றவும் அரசாங்கத்தின் இந்த நிதிகள் பெரும் பங்களிப்பாக இருக்க வேண்டும்.

இதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset