நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீர்திருத்தத்திற்கு இனப் பிரச்சினைகள் முக்கிய சவால்: பிரதமர்

உலு சிலாங்கூர்:

சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் தனது அரசாங்கம் இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை
ஒப்புக் கொண்டுள்ளார்.

குறிப்பாக நாட்டின் அரசியல் விவாதத்தில் இனப் பிரச்சினைகள் தொடர்ந்து எழுப்பப்படும் போது இந்த சவால் ஏற்படுகிறது.

இனத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினைகளை குறுகிய பார்வையுடன் பார்க்கும் போக்கு நீதி மற்றும் தேசிய ஒற்றுமையை மையமாகக் கொண்ட விரிவான மாற்றத்தைக் கொண்டுவருவதை கடினமாக்குகிறது.

சீனப் பிரச்சினை (மலாய்க்காரர்களால்) ஏன் சில சீனர்களால் அஞ்சப்படுகிறது.

அவர்கள் அதை சீனப் பள்ளிப் பிரச்சினை மட்டுமே என்று நினைக்கிறார்கள். வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை.

சில இந்தியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அத்தகைய அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும்.

ஏனெனில் அவை ஒரு நிலையான மற்றும் ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவாது.
மாறாக அனைத்து தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்கும் குறுகிய உணர்வுகளை மட்டுமே வலுப்படுத்துகின்றன.

அதனால்தான் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா, சரவாக் (மக்கள்) தங்கள் பிரச்சினைகளைக் கொண்டு வரவும்.

ஆனால் அவற்றை மலேசியாவின் பெரிய கட்டமைப்பிற்குள் பார்க்கவும் நாம் அழைக்க வேண்டும்.

மலேசிய ஓத்தாய் சீர்த்திருத்த குடும்பத்தின் குடும்ப தின விழாவில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset