நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகளுடன் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்: குணராஜ்

சிப்பாங்:

கேஎல்ஐஏ விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகளுடன்  ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.

கிட்டத்தட்ட 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் அவர்கள் விமான நிலையங்களில் ஒரு சில சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்தாண்டு போக்குவரத்து துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

போக்குவரத்து அமைச்சின் அதிரடி நடவடிக்கையின் வாயிலாக  கடந்தாண்டு ஐயப்ப பக்தர்கள் விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் முதல் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் அதே சலுகைகளுடன் இன்று சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

ஐயப்ப பக்தர்கள் விமான நிலையத்தில் காத்திருப்பதற்கான சிறப்பு இடம் வழங்கப்பட்டது.

அதே வேளையில் சோதனை இடங்களில் சிறப்பு வழித்தடமும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

இதன் வாயிலாக அவர்கள் முழு வசதியுடன் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சுக்கு எனது நன்றிகள்.

அதே வேளையில் பாத்தேக் ஏர், மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கும் எனது நன்றி.

குறிப்பாக பாத்தேக் ஏர் சிறப்பு ஏற்பாடுகளின் வாயிலாக பக்தர்களை வழியனுப்பி வைத்தனர்.
இவ்வேளையில் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயப்ப பக்தர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஒற்றுமையுடன் பிரார்த்தனைகளுக்கு சென்று வர வேண்டும் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset