நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஹைதீன் யாசின், அஸ்மின் இல்லாத PN – மலாய் அல்லாத மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது கடினம்

பினாங்கு: 

பெரிக்காதான் நேஷனல் (PN) கூட்டணியில் இருந்து முஹைதீன் யாசின், அஸ்மின் அலியின் விலகலைத் தொடர்ந்து, எதிர்வரும் தேர்தல்களில் மலாய் அல்லாத மக்களின் ஆதரவை PN தக்கவைத்துக் கொள்ளுவது கடினமாக இருக்கலாம் என்று உரிமை அமைப்பின் தலைவர் பி. ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒற்றை இனப் படிமத்துடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்படும் பெர்சாத்து (Bersatu) கட்சி, PN, மலாய் அல்லாத வாக்காளர்களை இணைக்கும் பாலமாகச் செயல்பட்டது என அவர் மேலும் கூறினார்.

“இப்போது இந்த இரண்டு தலைவர்களும் PN-ஐ விட்டு விலகியதால், (அந்த கூட்டணி) மலாய் அல்லாத வாக்காளர்களுடன் உள்ள தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள சிரமங்களை எதிர்கொள்ளலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முஹ்யிதீன் நாளை முதல் PN தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அஸ்மின் PN பொதுச் செயலாளர் பதவி, சிலாங்கூர்  PN தலைவர் பதவி ஆகியவற்றைக் கைவிடுவதாக அறிவித்தார். 

இதையடுத்து, மலேசிய இஸ்லாம் கட்சியின் (PAS) பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசன், கூட்டணியின் அமைப்பை வலுப்படுத்த PN-ஐ வழிநடத்த தயாராக இருப்பதாகவும், மாநிலத் தேர்தல்கள் (PRN),  PRU16-க்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

- சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset