செய்திகள் மலேசியா
1 எம்டிபி ஊழல் மீண்டும் நிகழாமல் இருக்க எம்ஏசிசி, போலிஸ் துறையில் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துங்கள்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
1 எம்டிபி ஊழல் மீண்டும் நிகழாமல் இருக்க எம்ஏசிசி, போலிஸ் துறையில் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துங்கள்.
இயக்கவியல் அமைச்சரும் ஜசெக தலைவருமான கோபிந்த் சிங் இதனை கூறினார்.
1 எம்டிபி போன்ற ஊழல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆக போலிஸ் படையிலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திலும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அதிகார துஷ்பிரயோகம், நாட்டின் முதலீட்டு நிறுவனத்தின் நிதியில் 2.3 பில்லியன் ரிங்கிட் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 1 எம்டிபி வழக்கின் தீர்ப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மடானி அரசாங்கம் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது.
அதில் சட்டத் துறை தலைவர், அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆனால் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். அமலாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களைக் கோருவதும் இப்போது அவசரத் தேவையாக உள்ளது.
அவை உண்மையில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கோபிந்த் சிங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 10:18 am
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் போது முஃபாகத் நேஷனலின் உணர்வு நிலைத்திருக்கும்: சனுசி
December 29, 2025, 10:16 am
ஜொகூரில் மீண்டும் வெள்ளம்: சிகாமட்டில் 6 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது
December 29, 2025, 10:00 am
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி என்ற உயரிய விருதை ஆசான்ஜி வழங்கி சிறப்பித்தார்
December 28, 2025, 10:53 pm
பெர்லிஸ் மந்திரி புசாராக அபு பக்கர் பதவியேற்றார்
December 28, 2025, 1:48 pm
சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமம் வழங்கியது
December 28, 2025, 12:51 pm
ஜோ லோ சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கும் வரை 1 எம்டிபி ஊழல் வழக்கு முடிவடையாது
December 28, 2025, 12:20 pm
பல்கலைக்கழக மாணவர்களே சமுதாயத்தின் நாளைய நம்பிக்கை தலைவர்கள்: டத்தோ சிவக்குமார் பாராட்டு
December 28, 2025, 11:52 am
