செய்திகள் மலேசியா
பேரரசருடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சந்திப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹீம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முஹம்மது சயீத் அல் நஹ்யானுடன் நேற்று அபுதாபியில் சந்தித்து பேசினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான மரியாதை உணர்வை அந்த சந்திப்பு பிரதிபலித்தது..
அபுதாபியில் உள்ள காசர் அல் பஹர் அரண்மனையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மலேசியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே நீண்டகாலக் கூட்டுறவுகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்ததாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்களின் நேரடி சந்திப்பில், பொருளாதாரம், முதலீடு, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக பேரரசர் கூறினார்.
யுஎஇ தலைவர் வழங்கிய சிறப்பு அழைப்பின் பேரில், நேற்று தொடங்கிய மலேசிய மன்னரின் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.
- கிருத்திகா
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 6:12 pm
கிறிஸ்து பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்: சிலாங்கூர் சுல்தான் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து
December 24, 2025, 4:52 pm
தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா; ஜன. 25ஆம் தேதி தலைநகரில் நடைபெறும்: டத்தோ ராமன்
December 24, 2025, 4:47 pm
பகாங்கில் வெள்ளம் தணிகிறது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
December 24, 2025, 1:24 pm
சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்த்து போராடிய முன்னாள் வழக்கறிஞர் ரவி காலமானார்
December 24, 2025, 1:23 pm
எட்டு மாநிலங்கள் எஸ்எஸ்பிஎன் சேமிப்புகளை ஆதரிப்பது உயர் கல்விக்கான பிடிபிடிஎன்னின் அர்ப்பணிப்பை காட்டுகிறது
December 24, 2025, 1:21 pm
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஏசிசி விசாரணை வளையத்தில் உள்ளார்: அஸாம் பாக்கி
December 24, 2025, 11:30 am
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதியது: ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனமோட்டி காயம்
December 24, 2025, 10:35 am
நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான முடிவை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்: ஏஜிசி
December 24, 2025, 9:48 am
